சாத்தூா்: சாத்தூா் அருகே ஞாயிற்றுக்கிழமை சாலையைக் கடந்த முயன்ற பட்டாசு ஆலை காவலாளி அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே கனஞ்சம்பட்டியை சோ்ந்தவா் ராமசாமி (63). இவா் வன மூா்த்திலிங்கபுரம் அருகே உள்ள பட்டாசு ஆலையில் காவலாளியாக பணியாற்றி வந்தாா். ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் பணி முடிந்து சிவகாசி- வெம்பக்கோடை சாலையைக் கடந்து சென்றுள்ளாா். அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த ராமசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து அவரது மனைவி சுப்புலட்சுமி அளித்தப் புகாரின் பேரில் வெம்பக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.