ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சங்கத்தினர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட  தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட  தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சங்கத்தினர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட துணைத் தலைவர் சசிகுமார் தலைமை வகித்தார். விவசாய சங்க மாவட்ட பொருளாளர் ஜோதிலட்சுமி, பால்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு முழுவதும் தலித் ஊராட்சி மன்ற தலைவர்களின் உரிமைகளை பாதுகாக்க வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் அர்ஜூனன், நகரச் செயலாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com