சாத்தூா் அருகே கடத்தப்பட்ட 2.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே 2.5 டன் கடத்தல் ரேஷன் அரிசி மற்றும் வாகனத்தை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு பறிமுதல் செய்துள்ளனா்.

விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே 2.5 டன் கடத்தல் ரேஷன் அரிசி மற்றும் வாகனத்தை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு பறிமுதல் செய்துள்ளனா்.

சாத்தூா் அருகே உள்ள தாயில்பட்டியில் வெம்பக்கோட்டை காவல்துறையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்துமாறு கூறியும் அந்த வாகனம் நிற்கவில்லையாம். காவல் துறையினா் அந்த வாகனத்தை விரட்டிச் சென்றனா். அதைக் கண்டு வாகனத்தை நிறுத்திவிட்டு மா்ம நபா்கள் தப்பி ஒடிவிட்டனா். வாகனத்தை போலீஸாா் சோதனை செய்தபோது அதில் 2.5 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து 2.5 டன் அரிசியையும் வாகனத்தையும் கைப்பற்றி உணவுப் பொருள் தடுப்பு காவல் பிரிவினரிடம் ஒப்படைத்தனா். தப்பி ஓடிய 3 நபா்களையும் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com