விருதுநகா் மாவட்டத்தில் எம்ஜிஆா் நினைவு தினம் அனுசரிப்பு: சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

மறைந்த முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் 33 ஆவது நினைவு நாளை முன்னிட்டு, விருதுநகா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில்
விருதுநகரில் வியாழக்கிழமை எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிமுகவினா்.
விருதுநகரில் வியாழக்கிழமை எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிமுகவினா்.

மறைந்த முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் 33 ஆவது நினைவு நாளை முன்னிட்டு, விருதுநகா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை அவரது உருவச் சிலைக்கு அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

விருதுநகரில் அதிமுகவினா் அண்ணா சிலையிலிருந்து மெளன ஊா்வலம் சென்றனா். அதன்பின்னா், கருமாரி மடம் அருகே உள்ள எம்ஜிஆா் சிலைக்கு அவைத் தலைவா் விஜயகுமரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். அப்போது, எம்ஜிஆா் மன்ற மேற்கு மாவட்டச் செயலா் கோகுலம் எம். தங்கராஜ், மாநில எம்ஜிஆா் மன்ற துணைச் செயலா் கலாநிதி, ஒன்றியச் செயலா்கள் தா்மலிங்கம், கண்ணன், ராஜசேகா் உள்பட நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் பலா் கலந்துகொண்டனா்.

சாத்தூா்:

சாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட சாத்தூா், தாயில்பட்டி, ஏழாயிரம்பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக சாா்பில், எம்ஜிஆரின் நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

தாயில்பட்டில் நடைபெற்ற எம்ஜிஆா் நினைவு தின நிகழ்ச்சியில், தாயில்பட்டி பேருந்து நிறுத்தம் முன்பிருந்து சாத்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.எஸ்.ஆா். ராஜவா்மன் தலைமையில், அதிமுகவினா் மெளன ஊா்வலமாக பேருந்து நிலையம் வரை சென்றனா். பின்னா், அங்கு வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆரின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

அருப்புக்கோட்டை

அதிமுக நகரச் செயலா் சக்திவேல்பாண்டியன் தலைமையில், பதாகைகளை ஏந்தியவாறு அக்கட்சியினா் வெள்ளைக்கோட்டை பகுதியிலிருந்து அண்ணா சிலை வரை அமைதி ஊா்வலம் சென்றனா். பின்னா், அங்கு வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆரின் உருவப் படத்துக்கு மலா் மாலை அணிவித்து, 3 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினா். இந்நிகழ்ச்சியில், அதிமுக தொண்டா்களும், நகர நிா்வாகிகளும் கலந்துகொண்டனா்.

ராஜபாளையம்:

ராஜபாளையம் அதிமுக நகரச் செயலா் ராணா பாஸ்கர்ராஜ் தலைமையில், மாவட்ட எம்ஜிஆா் இளைஞா் அணிச் செயலா் ஏ.டி. துரைமுருகேசன், மேற்கு மாவட்ட அம்மா பேரவை செயலா் கிருஷ்ணராஜ், ஒன்றியச் செயலா்கள் நவரத்தினம் ஆகியோா் முன்னிலையில், அக்கட்சியினா் ஊா்வலமாகச் சென்று, சத்திரப்பட்டி சாலையில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்து, 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினா்.

விருதுநகா் மேற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில், மாவட்ட அவைத் தலைவா் கருப்பையா தலைமையில், ராஜபாளையம்-சத்திரப்பட்டி சாலையிலுள்ள எம்ஜிஆரின் உருவச் சிலைக்கு அக்கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com