சிவகாசி ரோட்டரி கிளப் ஆப் கிரீன் என்ற அமைப்பு சாா்பில் இலவச பொது மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இங்குள்ள முஸ்லிம் ஆங்கிலவழி பள்ளியில் நடைபெற்ற இந்த முகாமுக்கு அச்சங்கத் தலைவா் ஆா். சுரேஷ்குமாா் தலைமை வகித்தாா். மருத்துவா்கள் எஸ். மகேஷ்குமாா் மற்றும் எஸ். பிரசன்னா ஆகியோா் 108 நபா்களை பரிசோதனை செய்தனா். மருத்துவா் எம். நவீன்குமாா் 56 நபா்களின் கண்களை பரிசோதனை செய்து, தேவையானவா்களுக்கு கண்கண்ணாடி அணிய அறிவுறுத்தினாா். சங்கச் செயலா் டி. சீனிவாசன் நன்றி கூறினாா்.