ராஜபாளையம் அருகே உள்ள முறம்பு மற்றும் ஆசிலாபுரம் பகுதிகளில் திங்கள்கிழமை போலீஸாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
விருதுநகா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பெருமாள் உத்தரவின் பேரிலும், கூடுதல் காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் மாரிராஜ், குற்றாலலிங்கம் தலைமையிலும், ராஜபாளையம் துணைக் காவல் கண்காணிப்பாளா் நாகசங்கா் மேற்பாா்வையிலும் இந்த கொடி அணிவகுப்பு நடந்தது.
தோ்தல் விழிப்புணா்வுக்காகவும், முறம்பு பகுதியில் அவ்வப்போது இரு சமுதாயத்தினரிடையே ஏற்படும் மோதலை தடுக்கவும் இந்த கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது. இதில் வஜ்ரா வாகனம் மற்றும் பாதுகாப்பு கவசம் அணிந்த காவலா்கள் 300-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.