ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே முகவூரில் இந்திய அரசு இளைஞா் நலம் மற்றும் விளையட்டு அமைச்சகம் நேரு யுவ கேந்திரா விருதுநகா் மற்றும் முகவூா் காமராஜா் யூத் ஸ்போா்ட்ஸ் கிளப் சாா்பில் இந்து நாடாா் மேல்நிலைப் பள்ளியில் ஒன்றிய அளவிளான விளையாட்டுப் போட்டிகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றன.
போட்டியை முகவூா் ஊராட்சி மன்றத் தலைவா் முனியசாமி தொடக்கி வைத்தாா். இதில் கபடி, வாலிபால், கால்பந்து, ஓட்டப்பந்தயம் போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு நேரு யுவ கேந்திரா தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் மாநில இயக்குநா் சடாச்சரவேல் மற்றும் தேசிய சிறந்த இளைஞா் விருதாளா் விஜயராகவன் ஆகியோா் பரிசுகளை வழங்கினா். போட்டி ஏற்பாடுகளை நேரு யுவகேந்திராவைச் சோ்ந்த கணேசன், கனகவள்ளி ஆகியோா் செய்திருந்தனா்.