சாத்தூரில் ஒன்றிய அளவிலான புதிய இந்தியா 2020 என்ற தலைப்பில் வியாழக்கிழமை விழிப்புணா்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
நேரு யுவகேந்திரா மற்றும் அக்னி சிறகுகள் இளைஞா் நற்பணி மன்றம் சாா்பில் தனியாா் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் மாவட்ட இளையோா் ஒருங்கிணைப்பாளா் ஞானச்சந்திரன் தலைமை வகித்தாா். மருத்துவா் அருணேஷ் தொடக்கி வைத்தாா். சாத்தூா் வட்டார மருத்துவ அலுவலா் ராஜாகுமாா் கொரோனா வைரஸ் பற்றி விழிப்புணா்வை ஏற்படுத்தினாா். இந்தியன் ஒவா்சீஸ் வங்கி மேலாளா் விஸ்வநாதன் மற்றும் வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் செல்வராஜ் ஆகியோா் கருத்துரையாற்றினா். விழாவில் சுமாா் 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.