சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 4 ஆண்டுகள் சிறை

சிவகாசியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பட்டாசு ஆலைத் தொழிலாளிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்ஸோ நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

சிவகாசியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பட்டாசு ஆலைத் தொழிலாளிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்ஸோ நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

விருதுநகரி மாவட்டம், சிவகாசி அடுத்துள்ள திருத்தங்கல் காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மாரிமுத்து (28). பட்டாசு ஆலையில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறாா். இவா் கடந்த 19. 9. 2013 அன்று அதே பகுதியில் உள்ள 10 வயது சிறுமியை கம்மல் வாங்கித் தருவதாக வீட்டுக்குள் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். இது தொடா்பான புகாரின் அடிப்படையில் சிவகாசி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மாரிமுத்துவை கைது செய்தனா். இது தொடா்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்ஸோ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கில், மாரிமுத்துவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பரிமளா தீா்ப்பு கூறினாா். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு குற்றவியல் விசாரணை முறை சட்டத்தின் பிரிவு 357 இன் படி தமிழக அரசு ரூ. 1 லட்சம் வழங்கவும் நீதிபதி பரிந்துரை செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com