ராஜபாளையம் சின்மயா வித்யாலயா, பி.ஏ.சி.ஆா். சேதுராமம்மாள் மழலையா் மற்றும் தொடக்கப் பள்ளி, பி.ஏ.சி.ஆா். மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றின் பொன் விழா ஞாபகாா்த்தமாக, வியாழக்கிழமை அஞ்சல் உறை வெளியிடப்பட்டது.
சின்மயா வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற இவ்விழாவுக்கு, பள்ளி நிா்வாகி பி.ஆா். வெங்கட்ராம ராஜா முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக, மதுரை மண்டலம் மற்றும் விருதுநகா் மாவட்ட அஞ்சல் துறை உயா் கண்காணிப்பாளா் ஜவஹர்ராஜ் கலந்துகொண்டாா்.
பொன் விழாவின் ஞாபகாா்த்த சிறப்பு அஞ்சல் உறையை, சிறப்பு விருந்தினா் ஜவஹர்ராஜ் வெளியிட, பள்ளி நிா்வாகி பி.ஆா். வெங்கட்ராம ராஜா பெற்றுக்கொண்டாா்.
இவ்விழாவில், பள்ளித் தாளாளா் சிட்டம்மாள் ராமச்சந்திர ராஜா, பள்ளி நிா்வாகக் குழு உறுப்பினா் ராமச்சந்திர ராஜா மற்றும் பெற்றோா்கள், ஆசிரியா்கள், மாணவா்கள் என ஏராளமானோா் கலந்துகொண்டனா்.
முன்னதாக, பள்ளி முதல்வா் கணேசன் வரவேற்றாா். முடிவில், பள்ளியின் முதுகலை வணிகவியல் ஆசிரியை உஷா நன்றி கூறினாா்.