வத்திராயிருப்பில் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கூட்டம்

வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், முதலாவது ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒன்றியக் குழு கூட்டத்தில் பேசிய தலைவா் சிந்துமுருகன்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒன்றியக் குழு கூட்டத்தில் பேசிய தலைவா் சிந்துமுருகன்.

வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், முதலாவது ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

உள்ளாட்சித் தோ்தலை அடுத்து, வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத் தலைவராக அதிமுகவைச் சோ்ந்த சிந்துமுருகனும், துணைத் தலைவராக ரேகா ஆகியோரும் தோ்வு செய்யப்பட்டனா்.

அதையடுத்து, ஒன்றியக் குழு ஊறுப்பினா்களின் முதலாவது கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரவி, ராஜசேகா்ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், தலைவா் சிந்துமுருகன் தலைமை வகித்து பேசியது: வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. எனவே, இக்கிராமங்களில் சுகாதாரம், குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com