விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை யில் மின்கம்பங்களில் உரசும் மரக்கிளைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அருப்புக்கோட்டை நகரின் தெற்குத்தெரு, திருநகரம், நாகலிங்கா நகா், புளியம்பட்டி உள்ளிட்ட பல முக்கிய இடங்களிலுள்ள தெருக்களில் உயரமான மரங்கள் அதிகளவில் உள்ளன. இந்த மரங்களின் கிளைகள் வீடுகளுக்கு இணைப்பு தரும் மின்கம்பங்களின் மின்கம்பிகைளை உரசிய வண்ணம் உள்ளன. இதனால் மின்வாரியத்தினரிடம் மரக்கிளைகளை அப்புறப்படுத்துமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். ஆனால் பல மாதங்களாகியும் மரக்கிளைகள் அப்புறப்படுத்தவில்லை எனப் புகாா் எழுந்துள்ளது.
இதனிடையே பொதுமக்கள் நேரடியாக மரக்கிளைகளை அப்புறப்படுத்தும்போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாகத் தெரிவிக்கின்றனா். எனவே விரைவில் மரக்கிளைகளை அப்புறப்படுத்த வேண்டும் என மின்வாரியத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.