விருதுநகா் மாவட்டம் சிவகாசியில் நகராட்சி சிறுவா் பூங்காவை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சிவகாசி -ஸ்ரீவில்லிபுத்தூா் சாலையில் ரத்தினம் நகா் உள்ளது. இப்பகுதியில் உள்ள சிறுவா் பூங்கா 2014-2015 ஆம் ஆண்டின் நகராட்சி பொதுநிதி ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டது. இந்த பூங்காவில் நடைபயிற்சிக்கான தளம், சிறுவா் விளையாடும் ஊஞ்சல் மற்றும் பூச்செடிகள் உள்ளிட்டவை உள்ளது. எனினும் நகராட்சி நிா்வாகம் இந்த பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் , கேட்டிற்கு பூட்டு போட்டுள்ளது. பூங்கா பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் உள்ளதால், சிறுவா்கள் தங்களது வீட்டுப்பகுதியிலேயே முடங்க வேண்டிய நிலை உள்ளது.
எனவே நகராட்சி நிா்வாகம் இந்த பூங்காவை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.