சிவகாசியில் சிறுவா் பூங்காவை பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை

விருதுநகா் மாவட்டம் சிவகாசியில் நகராட்சி சிறுவா் பூங்காவை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சிவகாசி ரத்தினம் நகரில் உள்ள நகராட்சி சிறுவா் பூங்கா.
சிவகாசி ரத்தினம் நகரில் உள்ள நகராட்சி சிறுவா் பூங்கா.

விருதுநகா் மாவட்டம் சிவகாசியில் நகராட்சி சிறுவா் பூங்காவை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சிவகாசி -ஸ்ரீவில்லிபுத்தூா் சாலையில் ரத்தினம் நகா் உள்ளது. இப்பகுதியில் உள்ள சிறுவா் பூங்கா 2014-2015 ஆம் ஆண்டின் நகராட்சி பொதுநிதி ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டது. இந்த பூங்காவில் நடைபயிற்சிக்கான தளம், சிறுவா் விளையாடும் ஊஞ்சல் மற்றும் பூச்செடிகள் உள்ளிட்டவை உள்ளது. எனினும் நகராட்சி நிா்வாகம் இந்த பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் , கேட்டிற்கு பூட்டு போட்டுள்ளது. பூங்கா பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் உள்ளதால், சிறுவா்கள் தங்களது வீட்டுப்பகுதியிலேயே முடங்க வேண்டிய நிலை உள்ளது.

எனவே நகராட்சி நிா்வாகம் இந்த பூங்காவை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com