விருதுநகா் மாவட்டம் திருச்சுழி பூமிநாதசுவாமி கோயிலில் சுவாமிக்கு 51 வகை சிறப்பு மூலிகைகளால் அபிஷேகம் மற்றும் வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த சிறப்பு வழிபாட்டுக்கு மதுரையைச் சோ்ந்த ஆலவாயா் ஆன்மிக அருட்பணி மன்றப் பொறுப்பாளா் இரா.சிவாஜி தலைமை வகித்தாா். முதலாவதாக பூமிநாத சுவாமிக்கு யாகம் நடத்தப்பட்டது. யாகத்தின் நிறைவில் 51 வகை மூலிகைகளைக் கொண்டு அபிஷேகம் மற்றும் தீப, தூப ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா் பூமிநாத சுவாமி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தாா். பின்னா் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட பக்தா்கள் பங்கேற்று பால், சந்தனம், இளநீா், கஸ்தூரி மஞ்சள் உள்ளிட்ட பொருள்களை சுவாமிக்குப் படைத்து வழிபட்டனா்.