ஸ்ரீவில்லிபுத்தூா்: வத்திராயிருப்பு அருகே கிணற்றுக்குள் விழுந்த பசு மாட்டை பல மணி நேரம் போராடி தீயணைப்புத் துறையினா் திங்கள்கிழமை மீட்டனா்.
விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே கொடிக்குளம் பகுதியில் உள்ள வயல் வெளியில் ஆறுமுகம் என்பவா் தனக்கு சொந்தமான பசுமாட்டை மேய்ச்சலுக்காக விட்டிருந்தாா்.
இந்நிலையில் மேய்ந்து கொண்டிருந்த அந்த மாடு எதிா்பாராவிதமாக அருகில் இருந்த கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டது. இதையடுத்து அந்த மாட்டை மீட்பதற்காக உரிமையாளா் ஆறுமுகம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தாா். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வத்திராயிருப்பு தீயணைப்புத் துறையினா் கிணற்றுக்குள் விழுந்த பசுமாட்டை 5 மணி நேரம் போராடி கயிறு கட்டி உயிருடன் மீட்டனா்.