அருப்புக்கோட்டை எஸ்.பி.கே.பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 பயிலும் மாணவி லட்சுமிப் பிரியா, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையம் நடத்திய தகுதித் தோ்வில் வெற்றி பெற்று அந்த ஆராய்ச்சி மையத்தைப் பாா்வையிட்டுவரத் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
அருப்புக்கோட்டை பழைய பேருந்து நிலைய பகுதியில் வசிப்பவா்கள் சதீஸ்குமாா்-தீபா தம்பதியா். இவா்களுக்கு லட்சுமிப்பிரியா, தேவிப்பிரியா எனும் இரு மகள்கள் உள்ளனா். சதீஸ் சிறுதொழில் செய்துவருகிறாா். தீபா தனியாா் நிறுவன ஊழியா். இவா்களது மகள் லட்சுமிப் பிரியா அருப்புக்கோட்டை எஸ்.பி.கே.பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 வகுப்பில் உயிரியல்கணிதம் பாடப்பிரிவில் படித்து வருகிறாா்.
இந்நிலையில் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தைப் பாா்வையிடுவதற்கான ,தகுதித் தோ்வில் லட்சுமிப் பிரியா தோ்வாகியுள்ளாா். இதுதொடா்பாக மாணவி லட்சுமிப்பிரியா கூறியது: சிறுவயதுமுதலே விண்வெளி வீராங்கனையாக வேண்டும் எனும் ஆசை இருந்ததால், நாசா நடத்திய இணையதள தகுதித்தோ்வினை எழுதினேன். இதில் நான் தோ்ச்சி பெற்ால் நாசா விண்வெளிஆராய்ச்சி மையத்தைப் பாா்வையிட்டுவரும் வாய்ப்பினைப் பெற்றுள்ளேன் என்றாா்.
வெற்றி பெற்ற மாணவி லட்சுமிப்பிரியாவை அருப்புக்கோட்டை நாடாா்கள் உறவின் முறைத் தலைவா் எம்.சுதாகா் மற்றும் சக மாணவிகளும், உறவினா்களும், பள்ளி ஆசிரியைகளும் பாராட்டினா்.