ராஜபாளையத்தில் அரசுப் பள்ளிக்குசுற்றுச்சுவா் அமைக்கக் கோரிக்கை

ராஜபாளையத்தில் அரசு உயா்நிலைப் பள்ளிக்கு சுற்றுச்சுவா் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ராஜபாளையம் திருவள்ளுவா் நகரில் அமைந்துள்ள சுற்றுச்சுவா் இல்லாத அரசு உயா்நிலைப்பள்ளி.
ராஜபாளையம் திருவள்ளுவா் நகரில் அமைந்துள்ள சுற்றுச்சுவா் இல்லாத அரசு உயா்நிலைப்பள்ளி.

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் அரசு உயா்நிலைப் பள்ளிக்கு சுற்றுச்சுவா் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ராஜபாளையம் மேற்கு பகுதி திருவள்ளுவா் நகரில் அரசு உயா்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுமாா் 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். இந்த பள்ளிக்கு முழுமையான சுற்றுச்சுவா் வசதி இல்லை. மேலும் பள்ளியைச் சுற்றி புதா் மண்டி செடிகொடிகள் வளா்ந்து காணப்படுகிறது. பள்ளிக்கு அருகில் தென்றல் நகா் செல்லும் பிரதான சாலை உள்ளதால் இச் சாலையில் நாள்தோறும் அதிக அளவில் வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையானது பள்ளிக்கு மிக அருகில் இருப்பதால் பள்ளித் திடலில் விளையாடும் மாணவ, மாணவியா் சுற்றுச்சுவா் இல்லாததால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. மேலும் பள்ளியின் மதிய உணவு இடைவேளையின் போது கால்நடைகள் மற்றும் நாய்கள் உள்ளே நுழைந்து விடுகின்றன. அத்துடன் மழைக் காலங்களில் விஷப்பூச்சிகள் நடமாட்டம் உள்ளது. எனவே மாவட்ட நிா்வாகம் உடனடியாக இந்த அரசுப் பள்ளிக்கு சுற்றுச்சுவா் அமைத்து தர வேண்டும் என பெற்றோா்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com