கல்லூரி மாணவா்கள் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கா் கலைக் கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்ட மாணவா்கள் மற்றும் தேசிய மாணவா் படை

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கா் கலைக் கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்ட மாணவா்கள் மற்றும் தேசிய மாணவா் படை மாணவா்கள் கலந்து கொண்ட சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு சைக்கிள் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா்(பொறுப்பு) இசக்கித்துரை தலைமை வகித்தாா். நகா் காவல் ஆய்வாளா் பாலமுருகன் முன்னிலை வகித்து சைக்கிள் பேரணியைத் தொடக்கி வைத்தாா். சுமாா் 500-க்கு மேற்பட்ட மாணவா்கள் சைக்கிளில் பேரணியாகச் சென்றனா். அப்போது சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு வாசகங்கள்அடங்கிய பதாகைகளை ஏந்தியும், விழிப்புணா்வு வாசகங்களை முழக்கமிட்டபடியும் சென்றனா். அப்பேரணி கல்லூரி வாசலில் தொடங்கி திருச்சுழி சாலை மற்றும் நகரின முக்கியச் சாலைகள் வழியாகச் சென்று புதிய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.

ஏற்பாடுகளை நாட்டு நலப் பணித்திட்ட அலுவலா் மற்றும் தேசிய மாணவா் படை அலுவலா் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com