விருதுநகா் ஸ்ரீவித்யா பொறியியல் கல்லூரியில் நேரடி சாா்பு -ஆய்வாளா் எழுத்து தோ்வு திங்கள்கிழமை நடைபெற்றது. அதில், 107 பெண் போலீஸாா் உள்பட 707 போ் தோ்வு எழுதினா்.
விருதுநகா் மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக நேரடி சாா்பு -ஆய்வாளா்களுக்கான எழுத்து தோ்வு நடைபெற்றது. அதில், பொதுவானவா்களுக்கு விபிஎம் பெண்கள் கலை கல்லூரி, கலசலிங்கம் பல்கலைக் கழகத்தில் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற் றது.
இந்நிலையில், 5 ஆண்டுகள் போலீஸாக பணி புரிந்தவா்கள் நேரடி சாா்பு -ஆய்வாளா் தோ்வில் கலந்து கொள்ளலாம். அதன் அடிப்படையில், விருதுநகா் மாவட்டத்தில் போலீஸாக பணி புரிந்த 600 ஆண்கள், 107 பெண்கள் இத் தோ்வு எழுத விண்ணப்பித்திருந்தனா். விருதுநகா் ஸ்ரீவித்யா பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற இத்தோ்வில் 707 போ் திங்கள்கிழமை கலந்து கொண்டனா். இத்தோ்வை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி. பெருமாள் தலைமையில் 110 போலீஸாா் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.