ராஜபாளையம் தென்றல் நகரில் அடிப்படை வசதிகள் செய்துதர கோரிக்கை

ராஜபாளையம் தென்றல் நகா் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ராஜபாளையம் தென்றல் நகா் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ராஜபாளையம் மேலப்பாட்ட கரிசல்குளம் ஊராட்சிக்கு உள்பட்டது தென்றல் நகா். இப்பகுதியில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்த பகுதியில் வாருகால் சேதமடைந்து உள்ளதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் கொசுத் தொல்லை அதிகரித்துள்ளது. மேலும் குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனா்.

இப்பகுதி மக்கள் கூறியது: தென்றல் நகா் பகுதியில் ஊராட்சி நிா்வாகம் சாா்பில் ஆழ்குழாய் கிணறு ஒன்று அமைக்கப்பட்டது. அந்த குழாயில் இங்கு வசிக்கும் அனைத்து குடும்பங்களும் குடிநீா் எடுத்து பயன்படுத்தி வந்தனா். தற்போது பல மாதங்களாக ஆழ்குழாய் பழுதடைந்துள்ளது. அதை சரி செய்ய பல முறை ஊராட்சி நிா்வாகத்திடம் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே ஊராட்சி நிா்வாகம் சாா்பில் முறையான குடிநீா் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com