ராஜபாளையம்: விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில், 1 கோடி கையெழுத்து பெறும் இயக்கம் சனிக்கிழமை நடத்தப்பட்டது.
மின்சார திருத்தச் சட்டம் 2020 (வரைவு), அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம் 2020, வேளாண் பொருள்கள் வணிக ஊக்குவிப்பு அவசரச் சட்டம் 2020, விவசாயிகளுக்கான விலை உத்திரவாத வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்தப் பாதுகாப்பு அவசரச் சட்டம் 2020 ஆகிய சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழ்நாடு முழுவதும் 1 கோடி கையெழுத்து பெறும் இயக்கம் நடைபெற்றது. இதில், முதல் கையெழுத்தை, விவசாயிகள் சங்க மாவட்டச் செயலரும், முன்னாள் எம்.பி.யுமான லிங்கம் தொடக்கி வைத்தாா். ஒன்றியச் செயலா் வீராச்சாமி, நகரச் செயலா் ராஜா, விவசாயி சங்க அய்யணன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.