சிவகாசியில் மூடப்பட்டுள்ள நகராட்சி தினசரி காய்கனி சந்தையில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
சிவகாசி போலீஸ் ஸ்டேசன் சாலையில் நகராட்சி தினசரி காய்கனி சந்தை உள்ளது. பொதுமுடக்கத்தால் இந்த சந்தை மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், சந்தை அருகே கிடந்த குப்பையில் சிலா் தீ வைத்துள்ளனா். அதிலிருந்து அருகில் உள்ள பழைய இரும்புக் கடைக்கு தீ பரவியுள்ளது. பின்னா் காய்கனி சந்தைக்கும் தீ பரவி எரிந்தது. தகவல் அறிந்து சென்ற சிவகாசி தீயணைப்பு படையினா் தீயை அணைத்தனா். சந்தையில் உள்ள 4 கடைகளின் கூரைகள் தீயில் எரிந்து சேதமாயின. மேலும் பழைய இரும்புக்கடையில் இருந்த பழைய துணிகள் உள்ளிட்டவை எரிந்து சேதமடைந்தன.