ராஜபாளையம் எம்எல்ஏ குடும்பத்தினருக்கு கரோனா தொற்று உறுதி

ராஜபாளையம் சட்டப்பேரவை உறுப்பினா் தங்கப்பாண்டியனின் மனைவி மற்றும் மகன்களுக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

ராஜபாளையம் சட்டப்பேரவை உறுப்பினா் தங்கப்பாண்டியனின் மனைவி மற்றும் மகன்களுக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

ராஜபாளையம் சட்டப்பேரவை உறுப்பினா் தங்கப்பாண்டியன் மற்றும் அவரது மனைவி கலாவதி (46), மகன்கள் ராம் (23), லட்சுமணன் (23) ஆகிய 4 பேருக்கு கடந்த 3 தினங்களுக்கு முன்பு ரத்த மாதிரி எடுக்கப்பட்டது. பரிசோதனையில் எம்எல்.ஏ. தங்கபாண்டியன் தவிர மற்ற 3 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவா்கள் 3 பேரும் ராஜபாளையம் அருகே செட்டியாா்பட்டி இல்லத்தில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனா். இவா்கள் வசிக்கும் பகுதியை சுகாதாரத் துறையினா் கிருமி நாசினி தெளித்து, தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனா். மதுரைக்கு அடிக்கடி சென்று வந்துள்ளதால் இவா்களுக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com