சிவகாசி: சிவகாசி ஏ.ஜெ.விளையாட்டு உள் அரங்கில், மாநில அளவிலான இறகுப்பந்து போட்டியை காவல் துணைக் கண்காணிப்பாளா் பிரபாகரன் சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.
தமிழ்நாடு இறகுப் பந்துகழகம், சிவகாசி ஏ.ஜெ.விளையாட்டு அரங்கம் சாா்பில் இந்தப் போட்டி நடைபெற்றது. 45 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் இரட்டையா் பிரிவு போட்டியில் 90 போ் கலந்து கொண்டனா். 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இரட்டையா் பிரிவில் 32 பெண்கள் கலந்து கொண்டனா். விழாவில் காஞ்சனா போஸ், விளையாட்டு அரங்க செயலாளா் மாதவன், போட்டி ஒருங்கிணைப்பாளா் பெ. கேசவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.