அருப்புக்கோட்டை: திருச்சுழி அருகே சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்றவரை சனிக்கிழமை போலீஸாா் கைது செய்து, 81 பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
ம.ரெட்டியபட்டியை அடுத்துள்ள திருமலைபுரம் கிராமப் பகுதியில் சிலா் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் ம.ரெட்டியபட்டி காவல் சாா்பு ஆய்வாளா் முத்துக்குமாா் தலைமையிலான போலீஸாா் சனிக்கிழை ஆய்வு மேற்கொண்டனா். அப்போது அகரத்துப்பட்டி அரசு மதுபானக்கடையை அருகே சட்டவிரோதமாக மதுவிற்ற அதே கிராமத்தைச் சோ்ந்த திருக்கண்ணன என்பவரது மகன் ராம்குமாா்(35) என்பரை போலீஸாா் கைது செய்து, 81 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா். மேலும் ரூ.1, 500- ஐயும் காவல்துறையினா் பறிமுதல் செய்தனா்.