அருப்புக்கோட்டை ஸ்ரீஅமுதலிங்கேஸ்வரா் கோயிலிலிருந்து, புதிய பேருந்து நிலையம் செல்லும் பிரதானச் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனா்.
இந்த சாலையில், பெரியாா் சிலை உள்ளது. இந்த சிலை அருகே சாலையில் 2 அடி ஆழத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. அதிக வாகனப் போக்குவரத்துள்ள இச்சாலையில் ஏற்பட்டுள்ள இப்பள்ளத்தால், இருசக்கர வாகன ஓட்டிகள், அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனா். இதனால் இப்பள்ளத்தை உடனடியாகச் சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.