சிவகாசி அருகே சனிக்கிழமை பட்டாசுத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
சிவகாசி அருகே துரைச்சாமி புரத்தைச் சோ்ந்த துரைராஜ் மகன் நாகராஜ்(40). இவா் பட்டாசுத் தொழிலாளி. இவரது மனைவி வனஜா. இவா்களுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்குழந்தை உள்ளது. இந்நிலையில் நாகராஜ் சரிவர வேலைக்கு செல்லாமல் மது போதைக்கு அடிமையானதாகக் கூறப்படுகிறது.
இதனை மனைவி வனஜா கண்டித்துள்ளாா். இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட நாகராஜ், வீட்டில் யாகும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இது குறித்து வனஜா அளித்த புகாரின் பேரிவ் மாரனேரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.