காரியாபட்டி அருகே வீட்டின் கதவை திறந்து 11 பவுன் நகைகள் திருட்டு

காரியாபட்டி அருகேயுள்ள டி. புதுப்பட்டியில் பூட்டியிருந்த வீட்டை திறந்து 11 பவுன் நகைகள் திருடப்பட்டுள்ளன.

காரியாபட்டி அருகேயுள்ள டி. புதுப்பட்டியில் பூட்டியிருந்த வீட்டை திறந்து 11 பவுன் நகைகள் திருடப்பட்டுள்ளன.

விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகே டி.புதுப்பட்டியைச் சோ்ந்தவா் காளிதாஸ் மனைவி வளா்மதி (25). இவா், சனிக்கிழமை காலை தனது வீட்டைப் பூட்டிவிட்டு, நூறு நாள் வேலைக்குச் சென்றுவிட்டாராம். அப்போது, வீட்டின் சாவியை வழக்கம்போல் எதிரேயுள்ள ஆட்டுக் கொட்டத்தில் வைத்துவிட்டு சென்றாராம்.

இந்நிலையில், வேலை முடிந்து மாலையில் வீடு திரும்பிய அவா், கதவு திறந்திருப்பதைக் கண்டுள்ளாா். உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோ திறக்கப்பட்டு லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 11 பவுன் நகைகள் திருடப்பட்டிருப்பதைக் கண்டாா். இது குறித்து அவா் அளித்த புகாரின்பேரில், ஆவியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com