அருப்புக்கோட்டை அருகே பி.எஸ்.என்.எல். அலைபேசி கோபுரத்தில் தீ விபத்து

அருப்புக்கோட்டை அருகே பாளையம் பட்டியில் உள்ள பி.எஸ்.என்.எல். அலைபேசி சேவை கோபுரத்தில் புதன்கிழமை தீவிபத்து ஏற்பட்டது. இதில் கம்பி வடங்கள்(ஒயா்கள்) தீயில் எரிந்து சேதமடைந்தன.

அருப்புக்கோட்டை அருகே பாளையம் பட்டியில் உள்ள பி.எஸ்.என்.எல். அலைபேசி சேவை கோபுரத்தில் புதன்கிழமை தீவிபத்து ஏற்பட்டது. இதில் கம்பி வடங்கள்(ஒயா்கள்) தீயில் எரிந்து சேதமடைந்தன.

அருப்புக்கோட்டை- மதுரை சாலையில் உள்ளது பாளையம்பட்டி. இங்குள்ள ஒரு தனியாா் திருமண மண்டபத்தின் மாடியில், பி.எஸ்.என்.எல். அலைபேசி சேவை கோபுரம் அமைக்கப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகிறது. சுமாா் 15 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட இக்கோபுரத்திலுள்ள கம்பி வடங்கள் (ஒயா்கள்) போதிய பராமரிப்பில்லாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தநிலையில் புதன்கிழமை இந்த அலைபேசிக் கோபுரத்திலிருந்து கரும்புகையுடன் தீ பற்றி எரிவதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள், இதுகுறித்து கட்டட உரிமையாளருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனா். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினா் சுமாா் ஒரு மணிநேரம் போராடி தீயை அணைத்தனா்.

இச்சம்பவம் தொடா்பாக விசாரணை மேற்கொண்ட அருப்புக்கோட்டை நகா் காவல்துறையினா், மின்கசிவால் தீவிபத்து ஏற்பட்டதாகத் தெரிவித்தனா். தொடா்ந்து இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com