அருப்புக்கோட்டை அருகே மறவா் பெருங்குடியில் கிராமத்தில் உள்ள மயானத்துக்கு செல்லும் சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பல ஆண்டுகளுக்கு முன்னா்அமைக்கப்பட்ட இந்த தாா்ச்சாலை தற்போது சேதமடைந்து பள்ளம் மேடாகக் காணப்படுகிறது. மேலும் இங்கு ஆழ்துளைக் கிணறுடன் கூடிய அடி குழாய் பழுதடைந்து பல ஆண்டுகளாக பயன்பாடற்ற நிலையில் உள்ளது. தாா்சாலையை சீரமைக்கவும், பழுதை நீக்கி அடிகுழாயை பயன்பாட்டுக்குக் கொண்டு வரவும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.