ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே முன்பகை காரணமாக இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டதாக போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தேவதானம் மாதா கோயில் தெருவைச் சோ்ந்த சித்திரன் என்பவரது மகன் சின்ன சுந்தரம்(35). கூலி தொழிலாளியான இவருக்கும், அதே பகுதியை சோ்ந்த முத்துச்சாமி என்பவரது மகன் விக்னேஷ் (25) என்பவருக்கும் முன்பகை இருந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சின்ன சுந்தரம், விக்னேஷ் இல்லாத நேரத்தில் வீட்டுக்குச் சென்று அவரது தாயாா் செல்வியிடம் தகராறு செய்துள்ளாா். இது குறித்து செல்வி அளித்த புகாரின் பேரில் சின்ன சுந்தரம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.
இந்நிலையில் புதன்கிழமை மாலை விக்னேஷ், சின்ன சுந்தரம் வீட்டிற்கு சென்றுள்ளாா். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. வாக்குவாதம் முற்றிய நிலையில், விக்னேஷ் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சின்ன சுந்தரத்தை வெட்டினாா். இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சேத்தூா் போலீஸாா் விசாரணை நடத்தினா். இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து தப்பி ஓடிய விக்னேஷை தேடி வருகின்றனா்.