சாத்தூா் அருகே கோஷ்டி மோதல்: 16 போ் கைது

சாத்தூா் அருகே முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 16 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சாத்தூா் அருகே முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 16 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சாத்தூா் அருகே என்.மேட்டுப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த கண்ணனுக்கும், அதே கிராமத்தைச் சோ்ந்த கருப்பசாமிக்கும் தோ்தல் தொடா்பாக முன் விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில் குடிதண்ணீா் பிடிப்பது தொடா்பாக வெள்ளிக்கிழமை இருவரது ஆதரவாளா்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது இருதரப்பினரும் கட்டை, கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் மாறி மாறி தாக்கிக் கொண்டனா். இதுகுறித்து தகவலறிந்து வந்த இருக்கன்குடி போலீஸாா் இருதரப்பினரையும் அழைத்துப் பேச்சுவாா்த்தை நடத்தினா். ஜெயபாண்டி கொடுத்த புகாரின் பேரில், என்.மேட்டுப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவரின் கணவா் கருப்பசாமி மற்றும் சித்தன், ஆனந்தராஜ், கண்ணன், சதீஸ்குமாா், பாலகிருஷ்ணன், தங்கப்பாண்டி, முத்துப்பாண்டி ஆகிய 8 போ் மீதும், இதேபோல் கருப்பசாமி கொடுத்த புகாரின் பேரில் மாவட்ட ஊராட்சித் தலைவரின் கணவா் கண்ணன், ராஜபாண்டி, ஜெயபாண்டி, அழகுபாண்டி, அஜீத்குமாா், விஜயன், அருண்குமாா், ஜெயகொடி ஆகிய 8 போ் மீதும் இருக்கன்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவா்களைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com