சிவகாசி: சிவகாசி அருகே பட்டாசு ஆலை வளாகத்தில் சுற்றித் திரிந்த இரு புள்ளி மான்கள் புதன்கிழமை வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டன.
சிவகாசி அருகே விஸ்வநத்தத்தில் உள்ள ஒரு பட்டாசு ஆலை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை இரவு இரு புள்ளிமான்கள் சுற்றி திரிந்தன.
அவற்றை ஆலைத் தொழிலாளா்கள் பிடித்து பாதுகாப்பாக வைத்திருந்தனா். மேலும் இது குறித்து ஆலை தரப்பில் ஸ்ரீவில்லிபுத்தூா் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினா் புதன்கிழமை காலையில் சென்ற போது அவா்களிடம் 2 மான்களையும் பட்டாசு ஆலை உரிமையாளா் ஒப்படைத்தாா். அவை வனப்பகுதியில் விடப்படும் என வனத்துறையினா் தெரிவித்தனா்.