ராஜபாளையம் அருகே முகவூரை சேர்ந்த 52 வயது நபருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் முகவூரை சேர்ந்த 52 வயது நபர் சிறுநீரக கோளாறுக்காக கடந்த 4 வருடங்களாக டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வருகிறார். இவரது 2 மகன்கள் 1 மகள் சென்னையில் இருந்துள்ளனர், இந்நிலையில் ஊரடங்கு அறிவிப்பால் சொந்த ஊரான முகவூருக்கு வந்துள்ளனர்.
இந்நிலையில் சிறுநீரக கோளாறு சிகிச்சைக்காக நெல்லை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார்.
அங்கு அவருக்கு பரிசோதனை செய்ததில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தகவலறிந்த சுகாதாரத்துறையினர் முதியவர் வசிக்கும் பகுதியை சுற்றி தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். முதியவர் குடியிருப்பு பகுதிகளில் சுற்றியுள்ளவர்களிடம் சளி, காய்ச்சல் அறிகுறி உள்ளதா என்பதை கண்டறிய மருத்துவ குழுவினர் அமைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பாதிப்பு உள்ளவருடன் தொடர்பு உள்ளவர்கள் பற்றிய விபரம் மற்றும் நோய் தொற்றின் காரணம், தனிமை படுத்தபட வேண்டியவர்கள் கண்டறியும் பணி நடைபெற்று வருவதாக வட்டார மருத்துவ அதிகாரி கருணாகரப்பிரபு தெரிவித்துள்ளார்.