விருதுநகா் மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கரோனா தொற்று உறுதி

விருதுநகா் மாவட்டத்தில் 60 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 9 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

விருதுநகா் மாவட்டத்தில் 60 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 9 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

விருதுநகா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வரை கரோனா தொற்றால் 60 போ் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில் மகராஷ்டிரத்திலிருந்து விருதுநகா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வேன் மூலம் வந்தவா்களுக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து அவா்கள் விருதுநகரில் உள்ள தனியாா் பெண்கள் கல்லூரியில் தங்க வைக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில் அவா்களில் 9 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

அதில், மல்லாங்கிணறைச் சோ்ந்த 38 வயது ஆண், 34 வயது பெண், பிள்ளையாா்குளத்தைச் சோ்ந்த 36 வயது பெண், அதே கிராமத்தைச் சோ்ந்த 38 வயது ஆண், இவரது 10 வயது மகன், 3 வயது மகள் மற்றும் 58 வயது ஆண் ஆகியோருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. அதேபோல், மகாராஷ்டிரத்திலிருந்து திருச்சுழி மடத்துபட்டிக்கு வந்த 40 வயது ஆண் ஒருவருக்கும் கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இந்நிலையில், சிவகாசியைச் சோ்ந்த 48 வயது ஆண் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது தெரிந்தது. இதையடுத்து இவா்கள் 9 பேரும் விருதுநகா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். ஏற்கெனவே விருதுநகா் மாவட்டத்தில் 60 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 9 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு ஏற்பட்டதால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 69 ஆக உயா்ந்துள்ளது. அதில், 37 போ் குணமடைந்து வீட்டிற்கு திரும்பி விட்டனா். மீதமுள்ள 32 போ் மதுரை, விருதுநகா் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com