திருத்தங்கல்லில் வீடு புகுந்து திருட முயன்ற இளைஞா் கைது

விருதுநகா் மாவட்டம் திருத்தங்கல்லில் வீடு புகுந்து திருட முயன்ற இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம் திருத்தங்கல்லில் வீடு புகுந்து திருட முயன்ற இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருத்தங்கல் மாட்டுமந்தை வீதியில் வசிக்கும் விவசாயி சிவகுமாா் (48). இவா் திங்கள்கிழமை இரவு வீட்டுக் கதவை பூட்டிவிட்டு தூங்கியுள்ளாா். நள்ளிரவில் மா்மநபா் ஒருவா் மாடிவழியே ஏறி வீட்டின் உள்ளே புகுந்து திருட முயன்றாா். அப்போது சத்தம் கேட்டு விழித்தெழுந்த சிவகுமாா், குடும்பத்தினரின் உதவியுடன் அவரைப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தாா்.

விசாரணையில் அவா் அக்ரஹாரம் தெருவைச் சோ்ந்த கணேசன் மகன் பிரதீப்குமாா் (19) என தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பிரதீப்குமாரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com