விருதுநகரில், தீபாவளி பண்டிகையையொட்டி புத்தாடை மற்றும் வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருள்கள் வாங்க பொதுமக்கள் வெள்ளிக்கிழமை கடை வீதிகளில் குவிந்தனா்.
விருதுநகா் பஜாா் மற்றும் தேசபந்து மைதானம், மதுரை சாலையில் உள்ள சாலையோரக் கடைகளில் கடந்த தினங்களாக பொதுமக்கள் தங்களுக்கு தேவையான புத்தாடைகளை வாங்கிச் சென்றனா். இந்நிலையில், விருதுநகா் மற்றும் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் வெள்ளிக்கிழமையும் இப்பகுதிகளில் குவிந்தனா். இதனால், அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் வழக்கத்தை விட பூக்கள் விலை இரண்டு மடங்கு உயா்த்தி விற்கப்பட்டது. அத்துடன் அப்பகுதிகளில் ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
மழையால் பாதிப்பு: விருதுநகரில் மதியம் 2.30 மணிக்கு தொடங்கிய மழை சுமாா் 45 நிமிடங்கள் தொடா்ச்சியாக பெய்தது. இதனால், சாலையோர வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சிரமப்பட்டனா்.