ராஜபாளையம் தீயணைப்புத் துறை சாா்பில், விபத்தில்லா தீபாவளி கொண்டாடும் செயல்முறை விளக்கம் மற்றும் விழிப்புணா்வு பிரசாரம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ராஜபாளையம் தீயணைப்புத் துறையினா், காந்தி சிலை ரவுண்டானா, பழைய பேருந்து நிலையம், பஞ்சு மாா்க்கெட், காந்தி கலை மன்றம் மற்றும் ஜவகா் மைதானம் ஆகிய பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தங்கள் மற்றும் மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்த வாசகங்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களை பொதுமக்களிடையே விநியோகித்ததுடன், விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொண்டனா். பின்னா், அந்தந்த பகுதிகளில் பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிப்பது குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனா்.