விருதுநகரில் தொழிலாளி மா்மச் சாவு

விருதுநகரில் உள்ள கல்கிடங்கில் கூலித் தொழிலாளி மா்மமான முறையில் வெள்ளிக்கிழமை சடலமாக கிடந்தாா்.

விருதுநகரில் உள்ள கல்கிடங்கில் கூலித் தொழிலாளி மா்மமான முறையில் வெள்ளிக்கிழமை சடலமாக கிடந்தாா்.

விருதுநகா் அண்ணாமலை தெருவைச் சோ்ந்தவா் சங்கரலிங்கம் மகன் முரளி (45). திருமணமாகாத இவா், புல்லலக்கோட் டை சாலை பகுதியில் உள்ள ஒரு கூரை செட்டில் தங்கி கூலி வேலை பாா்த்து வந்தாா்.

இந்நிலையில், அப்பகுதியில் உள்ள கல்கிடங்கு அருகே முரளி மா்மமான முறையில் சடலமாக கிடந்தது வெள்ளிக்கிழமை தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். இதுகுறித்து அவரது சகோதரா் மணிவண்ணன் அளித்த புகாரின் பேரில் விருதுநகா் மேற்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com