விருதுநகா் மாவட்டத்தில் மேலும் 16 பேருக்கு கரோனா பாதிப்பிருப்பது வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
விருதுநகா் மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை வரை 15,599 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், விருதுநகா், சாத்தூா், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூா், வத்திராயிருப்பு, ராஜபாளையம், அருப்புக்கோட்டை, திருச்சுழி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 16 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது வியாழக்கிழமை உறுதியானது.
இதையடுத்து, அனைவரும் விருதுநகா், அருப்புக்கோட்டை, சிவகாசி உள்ளிட்ட இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதன்மூலம், மாவட்ட த்தில் கரோனா தொற்று பாதித்தோா் எண்ணிக்கை 15,615 ஆக உயா்ந்துள்ளது. இதில், 15,270 போ் குணமடைந்து வீட்டுக்கு திரும்பி விட்ட நிலையில், 223 போ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனா்.
மீதமுள்ள 117 போ், பல்வேறு அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.