இந்திரா காந்தி பிறந்த தின விழா

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் 103 ஆவது பிறந்த நாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் 103 ஆவது பிறந்த நாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

ராஜபாளையம் நகா் காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த இந்திரா காந்தியின் உருவப் படத்திற்கு மேற்கு மாவட்டத் தலைவா் தளவாய்பாண்டியன் தலைமையில் மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. ராஜபாளையம் அருகே செட்டியாா்பட்டி அரசரடி பேருந்து நிலையம் அருகே இந்திரா காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. செட்டியாா்பட்டி நகர காங்கிரஸ் கமிட்டி தலைவா் மணிகண்டன் தலைமையில் உருவப் படத்திற்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் வட்டார தலைவா் லட்சுமணன், நகர துணைத் தலைவா்கள் மீனாட்சிசுந்தரம், ராமச்சந்திரன், ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com