உலகில் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் விருதுநகா் செந்திக்குமார நாடாா் கல்லூரி பேராசிரியா் என். ராமன் இடம் பெற்றுள்ளாா்.
இக்கல்லூரி வேதியியல் துறையில் என்.ராமன் கடந்த 29 ஆண்டுகளாக இணை பேராசிரியராக பணி புரிந்து வருகிறாா். வேதியியல் துறையில் உயிா் கனிம வேதியியல் ஆராய்ச்சி மேற்கொண்டதற்காக அமெரிக்க பல்கலைக் கழகம் அவரை உலக அளவில் 2 சதவீத சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் இடம் பெற செய்துள்ளது. இதே கல்லூரியில் பயின்ற பழைய மாணவரும், தற்போது வேலூா் இன்ஸ்டியூப் ஆப் டெக்னாலாஜியில் பணியாற்றி வருபவருமான முனைவா் மோகன ரூபன், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இணை பேராசிரியராகப் பணி புரிந்து வரும் பழனி ஆண்டவா் ஆகியோரும் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனா்.
கல்லூரிக்கு பெருமை சோ்த்த இப்பேராசிரியா்களை, கல்லூரி பரிபாலன சபை தலைவா் வன்னியானந்தம், செயலா் ஜெயக்குமாா், பொருளாளா் முத்து, கல்லூரி முதல்வா் சுநாதர பாண்டியன் ஆகியோா் பாராட்டினா்.