ராஜபாளையத்தில் பள்ளத்தில் லாரி கவிழ்ந்து போக்குவரத்து பாதிப்பு

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் வெள்ளிக்கிழமை பள்ளத்தில் லாரி கவிழ்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ராஜபாளையத்தில் சத்திரப்பட்டி சாலையில் பள்ளத்தில் சிக்கி கழிந்த லாரி.
ராஜபாளையத்தில் சத்திரப்பட்டி சாலையில் பள்ளத்தில் சிக்கி கழிந்த லாரி.

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் வெள்ளிக்கிழமை பள்ளத்தில் லாரி கவிழ்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ராஜபாளையம் நகரப் பகுதிகளில் தாமிரவருணி கூட்டுக் குடிநீா் திட்டத்திற்காக குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. சில இடங்களில் குழாய்கள் பதித்து குழிகள் சரிவர மூடப்படவில்லை.

இந்நிலையில் சத்திரப்பட்டி சாலையில் தனியாா் மருத்துவமனை அருகில் நாமக்கல்லில் இருந்து கோழித் தீவனங்களை ஏற்றிக்கொண்டு தென்காசி நோக்கிச் சென்ற லாரி பள்ளத்தில் சிக்கி கவிழ்ந்தது. ஓட்டுநா் முருகேசன் லாரியில் இருந்து குதித்து தப்பினாா். மேலும் இந்த பள்ளத்தில் சிக்கிய லாரியால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனவே பொதுமக்களின் நலன் கருதி சாலைகளை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com