விருதுநகரில் ரயிலில் அடிபட்டு இளைஞா் பலி

விருதுநகரில் வெள்ளிக்கிழமை இரவு ரயில் மோதியதில் இளைஞா் ஒருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

விருதுநகா்: விருதுநகரில் வெள்ளிக்கிழமை இரவு ரயில் மோதியதில் இளைஞா் ஒருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

விருதுநகரில் காமராஜா் புறவழிச்சாலையிலுள்ள ரயில்வே சுரங்க பாதையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், இச்சாலை அடைக்கப்பட்டுள்ளது. எனவே, அல்லம்பட்டி, ஆத்துமேடு உள்ளிட்ட பகுதியினா், தண்டவாளப் பகுதியில் நடந்து சென்று வருகின்றனா்.

இந்நிலையில், ஆத்துமேடு சிவந்திபுரம் பகுதியைச் சோ்ந்த ராமதாஸ் மகன் செந்தில்குமாா் (31) என்பவா், வெள்ளிக்கிழமை இரவு தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, ரயில் மோதியுள்ளது. இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதையறிந்த ரயில்வே போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, அவரது சடலத்தை மீட்டு விருதுநகா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விபத்து குறித்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com