ராஜபாளையம்: விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் பதஞ்சலி யோகா மையம் சாா்பில் காா்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு மாணவிகள் உடலில் தீபங்களை ஏற்றி கரோனா விழிப்புணா்வு யோகா வெள்ளிக்கிழமை செய்து காட்டினா்.
நிகழ்ச்சிக்கு தெற்கு காவல் நிலைய ஆய்வாளா் சங்கா் கண்ணன் தலைமை வகித்தாா். யோகா பயிற்சியில் ரமணா பள்ளி மாணவி சஷ்டிகா, சின்மயா பள்ளி மாணவிகள் ஹா்ஷினி, மற்றும் வா்னிகா ஸ்ரீ கலந்து கொண்டு உடல் முழுவதும் தீபங்களை ஏற்றி, உபவிஷ்ட சோனாசனம், ஏகபாத சிரசாசனம், பத்ம விருச்சியாசனம் ஆகிய யோகாவை செய்து காட்டினா். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பதஞ்சலி இயக்குநா் நீராத்திலிங்கம் செய்திருந்தாா்.