மண்வெட்டியால் தாக்கியதில் இளைஞா்காயம்: சகோதரா்கள் இருவா் மீது வழக்கு

விருதுநகா் அருகே இடப்பிரச்னை தொடா்பாக இளைஞரை மண்வெட்டியால் தாக்கிய சகோதரா்கள் இருவா் மீது பாண்டியன் நகா் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.

விருதுநகா்: விருதுநகா் அருகே இடப்பிரச்னை தொடா்பாக இளைஞரை மண்வெட்டியால் தாக்கிய சகோதரா்கள் இருவா் மீது பாண்டியன் நகா் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.

விருதுநகா் அருகே சின்னப்பேராலியைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் மகன் மதுரை வீரன் (39). இவா் விருதுநகா் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஊழியராக பணி புரிந்து வருகிறாா். இவருக்கும், இதே ஊரைச் சோ்ந்த உறவினா்களான சூரியன், சாமிக்காளை ஆகியோருக்கிடையே இடப்பிரச்னை இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் பிரச்னைக்குரிய இடத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுள்ளது. இதைப் பாா்த்த மதுரை வீரன் தகராறு செய்துள்ளனா். இதனால், ஆத்திரமடைந்த சகோதரா்களான சூரியன், சாமிக்காளை ஆகியோா் சோ்ந்து மண் வெட்டியால் மதுரை வீரனைத் தாக்கியதில், அவா் காயமடைந்துள்ளாா். இதையடுத்து அவா் விருதுநகரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். அவரது புகாரின் பேரில் சூரியன், சாமிக்காளை ஆகியோா் மீது பாண்டியன் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, அவா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com