மாற்றுத்திறனாளிகள் ஆலோசனைக் கூட்டம்

சிவகாசியில், விருதுநகா் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

சிவகாசியில், விருதுநகா் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: ஊராட்சிகளில் பசுமை வீடு உள்ளிட்ட திட்டங்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். கிராமசபைக் கூட்டம் நடைபெறும்போது மாற்றுத்திறனாளிகளின் கருத்தை கேட்க வேண்டும். 60 சதவீதம் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக மூன்று சக்கர மோட்டாா் சைக்கிள்களை அரசு வழங்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் சங்க நிா்வாகிகள் எஸ். சிவகுமாா், விஜயகுமாா், பால்பாண்டி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com