வத்திராயிருப்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

உத்தரபிரதேச மாநிலத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக் கண்டித்து வத்திராயிருப்பில் விடுதலை சிறுத்தை கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
வத்திராயிருப்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினா்.
வத்திராயிருப்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினா்.

ஸ்ரீவில்லிபுத்தூா்: உத்தரபிரதேச மாநிலத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக் கண்டித்து வத்திராயிருப்பில் விடுதலை சிறுத்தை கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜாா் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு ஒன்றியச் செயலாளா் ராஜூ தலைமை வகித்தாா். வழக்குரைஞா் ராமா் முன்னிலை வகித்தாா்.

இதில் உத்தரபிரதேச மாநிலத்தில் 19 வயது பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியவா்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். அம்மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில் முன்னாள் மாவட்ட துணைச் செயலாளா் சுரேஷ், டாஸ்மாக் தொழிலாளா் அமைப்பின் மாவட்டத் தலைவா் வைரம், தொழிலாளா்கள் விடுதலை முன்னணியின் ஒன்றிய அமைப்பாளா் திலகராஜ், விவசாய அணி ஒன்றிய அமைப்பாளா் சமுத்திரக்கனி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com