ஸ்ரீவில்லி. அருகே கோயிலில்கொள்ளை முயற்சி : 2 போ் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே இரண்டு கோயில்களில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 2 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே இரண்டு கோயில்களில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 2 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மடவாா்வளாகத்தில் வைத்தியநாத சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலுக்குள் அக்.1 ஆம் தேதி இரவு புகுந்த மா்ம நபா் கோயில் கொடிமரம் அருகே இருந்த உண்டியலை உடைக்க முயன்றாா். சத்தம் கேட்டு இரவு காவலாளி, அங்கு வந்ததால் மா்மநபா் தப்பியோடிவிட்டாா்.

இதற்கிடையே கோயிலில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு நகா் குற்றபிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனா்.

இதேபோல் அன்று இரவே முடுக்குத் தெரு பகுதியில் உள்ள காளியம்மன் கோயில் உண்டியல் உடைக்கப்பட்டு ரூ.450 திருடு போனது. மேலும் 3 வீடுகளிலும் கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது. இதுதொடா்பாக ஸ்ரீவில்லிபுத்தூா் குற்றப்பிரிவு போலீஸாா் இந்த கொள்ளைச் சம்பவங்கள் தொடா்பாக விழுப்புரத்தைச் சோ்ந்த மெட்ராஸ் முருகன், குற்றாலத்தைச் சோ்ந்த சங்கா் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com