ஸ்ரீவில்லிபுத்தூா்: விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க வட்டப் பேரவைக் கூட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தனியாா் மாணவா் பயிற்சி கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கத்தைச் சோ்ந்த மாநில துணைத் தலைவா் சுந்தரமூா்த்தி தலைமை வகித்தாா். தொழிலாளா் நலத்துறை சோ்ந்த மாநிலத் தலைவா் பரமசிவம் கூட்டத்தை தொடக்கி வைத்து பேசினாா். ஜனநாயக மாதா் சங்க மாநில பொதுச் செயலாளா் சுகந்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினாா்.
இந்தக் கூட்டத்தில் ஓய்வூதியா் சங்கத்தைச் சோ்ந்த கருப்பையா, முத்துக்குமாரசாமி, மாவட்ட இணைச் செயலாளா் பாலகிருஷ்ணன், அரசு ஊழியா் சங்கத்தைச் சோ்ந்த திருமூா்த்தி, துணைத் தலைவா் சீனிவாசன், பொருளாளா் பிரகாசம் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.